காஞ்சித்தினையும் மறவர் போரும்:

காஞ்சித் திணை தொல்காப்பியர் நோக்கில் புறத்திணைப் பகுதியில் வரும் ஏழு திணைகளில் ஒன்று. இது அகத்திணையில் வரும் பெருந்திணையின் புறமாகக்கூறப்படுகிறது.(1)
மறவர் புகழ்பாடும் புறப்பொருள் வெண்பாமாலையில் இத்தினைபற்றிய தெளிவாக விவரிக்கப்பட்டு உள்ளது.


இத்திணை ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் காஞ்சிப்பூவை சூடி போர் செய்வர் இதனால் இது காஞ்சிப்படலம் எனப்பட்டது.(2)
"வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே" என்பது பன்னிரு படலம்.
வஞ்சித்திணை என்பது ஒரு மன்னன் பகை நாட்டை கவர்த்தல் பொருட்டு அந்நாட்டின் மீது போர் தொடுத்தல் ஆகும். அவ்வாறு போர் தொடுக்கும் எதிரியின் முயற்ச்சியை அறிந்த அந்நாட்டு அரசன் அம்முயற்சியை முறியடித்தலே காஞ்சித்திணை ஆகும்.(3)


காஞ்சியதிற்வு,தழிஞ்சி,படை வழக்கு,....முன்னிருப்பு என இருபத்தொரு துறைகள் இத்தினையின் துறைகள் ஆகும்.(4)

வரலாற்றில் காஞ்சித்திணை:
==============================
வரலாற்றில் இத்திணை சோழர் மற்றும் பாண்டியர்க்கு இடையில் நடந்த போரில் கையாளப்பட்டு உள்ளது.
1070 களில் தொடங்கி 1216 வரை சோழர் கீழ் ஆட்சி செய்த பாண்டியர்க்கு இடையில் அரியணை யாருக்கு என்ற சகோதர யுத்தம் தொடர்ந்து நடை பெற்று வந்தது.
சோழர் பல முறை படை எடுத்து தங்களை எதிர்த்த பாண்டியனை வீழ்த்தி சாதகமாக இருந்த பாண்டியனைஆட்சியில் அமர்த்தினர்.


கி.பி 1210 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் சோழர்க்கும் பாண்டியர்க்கும் இடையில் நடந்த யுத்தத்தில் குலோத்துங்கனின் வெற்றியை திருமய்யம் தாலுகா சேரனூரில் உள்ள கல்வெட்டு ஒன்று விரிவாக சொல்கிறது.
வீரபாண்டியனை வென்று விக்கிரம பாண்டியனிடம் ஆட்சியை சோழன் ஒப்படைத்ததை சொல்கிறது. இதில் பாண்டியன் படையில் இருந்த மறவர் காஞ்சித்திணை ஒழுக்கத்தை கையாண்டதையும் சொல்கிறது.


இந்த கல்வேட்டில்
"விருதர் முகமழிய மறபடையுடன் ஏழகபடை சிறைப்"
என்ற வரிகள் பாண்டியனின் கோட்டையை காத்து நின்று எதிர்த்து போர் செய்த மறவர் படையும் எழகபடையும் தோல்வி அடைந்தத்தை சொல்கிறது.
இதனை "Inscription in The Pudhukottai State" என்ற தொல்லியல் துறை ஆவணத்தில் பின் வருமாறு விவரிக்கப்பட்டு உள்ளது.
"Marapadai is the marava army.The Maravars were a warrior race from time immemorial and the scene of present campaign was laid in the Marava country on the borders of the Cola and pandiya country"(5)
மறப்படை என்பது மறவர் படை. மறவர் என்பவர் நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து இயங்கி வரும் போர்க்குடி. இந்த சண்டை மறவர் நாட்டின் எல்லையில் (இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில்) நடந்து உள்ளது . இது சோழர் மற்றும் பாண்டியர் நாட்டின் எல்லைகள்.



destroyed senegar and cut off the garland of Portia flowers worn by its defenders" (6)
அடுத்த வரியில் "காஞ்சிதறித்து தெந்மதிரைபுரம்"
என்ற வரிகல் இந்த மறவர் படை காஞ்சிப்பூவினால் ஆன மாலை அணிந்து காஞ்சி திணை ஒழுக்கத்தை கடைபிடித்து சோழர் படை எதிர்த்து பாண்டியர் கோட்டையை காத்ததாகவும். சோழர் படையால் அந்த படையினரின் சிறைபிடிக்கப்பட்டு அவர்கள் அணிந்து இருந்த காஞ்சி பூவினால் ஆன மாலை அறுக்கப்பட்டதையும் சொல்கிறது.
இந்த தகவல்களை திரு.நீலகண்ட சாஸ்த்ரி அவர்கள் தான் எழுதிய "சோழர்கள்" புத்தகத்தில் உறுதி செய்கிறார்.(7)



மேலும் இந்த போரில்
பாண்டியன் மகனின் மூக்கை அறுத்தல், பாண்டியன் மனைவியை கவர்தல், பாண்டியர் முடிசூடும் மாளிகையை இடித்து தரைமட்டமாக்குதல்
என மிகக்கடுமையாக நடவடிக்கைகளை குலோத்துங்கன் மேற்க்கொள்கிறான் என கல்வெட்டு விவரிக்கிறது.
பாண்டியர் படிப்படியாக பலம் பெற்று வந்ததும் அதற்க்கு நேர்மாறாக தன் பலம் குறைந்து வந்ததை உணர்ந்த குலோத்துங்கன் இந்த கடுமையான நடவடிக்கைகளை் மேற்க்கொண்டான் எனவும். இதன் விளைவாகவே சில ஆண்டுகளுக்கு பின் சோழ நாடின் மீது படை எடுத்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் அதை கடுமையாக தாக்கி அதற்க்கு பல சேதங்களை விளைவித்து முடிகொண்ட சோழபுரத்தில் சோழர் முடிசூட்டிக்கொள்ளும் மண்டபத்தில் வீராபிஷேகம் செய்து கொண்டான் என்ற கூடுதல் தகவலை திரு.நீலகண்ட சாஸ்த்ரி தருகிறார்(8)

ஆடிக்குறிப்புக்கள்:
-----------------------------------
1)தொல்காப்பியம்
2,3,4)காஞ்சிப்படலம்,புறப்பொருள் வெண்பாமாலை
5,6)Inscription In The Pudukkottai State
7,8)சோழர்கள்-K.A.நீலகண்ட சாஸ்த்ரி

Popular posts from this blog

மூக்கறுப்பு போர்

வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்

திருவிதாங்கூர் மறவர் படை