திருவிதாங்கூர் மறவர் படை
மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம் மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது . மிகவும் திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில் வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர் .(1) ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும் கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார் . ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்கு எதிராகவே கலகம் செய்தனர் .(2) நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர் .(3) திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவை முற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார் .(4) தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர் . இது திருவிதாங்கூர் ...