Posts

திருவிதாங்கூர் மறவர் படை

Image
மார்த்தாண்ட   வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம்   மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது . மிகவும் திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில் வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர் .(1) ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும் கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார் . ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்கு எதிராகவே கலகம் செய்தனர் .(2) நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர் .(3) திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவை முற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார் .(4) தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர் . இது திருவிதாங்கூர் ...

சேதுபதிகளுக்கும் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கும் இடையில் நடந்த போர்கள்

Image
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் 1673 ஆம் ஆண்டு தஞ்சை மீது படையெடுத்து தஞ்சை நாயக்கர் மன்னனான விஜய ராகவ நாயக்கரை கொலை செய்துவிட்டு தன் தம்பியான அழகிரி நாயக்கரை தஞ்சை அரசனாக அறிவித்தார். விஜய ராகவ நாயக்கரின் மகன் பீஜப்பூர் சுல்தான் உதவியை நாட சுல்தான் தன் தளபதி வெங்கோஜி தலைமையில்  படையை அனுப்பிவைக்கிறார்.படை நடத்திவந்த வெங்கோஜி அழகிரி நாயக்கரை வென்றவுடன் விஜய ராகவ நாயக்கர் மகனை அரசன் ஆக்காமல் தஞ்சை அரசனாக தன்னை அறிவித்துக்கொண்டு தஞ்சையை ஆட்சி செய்யத்துவங்குறார். இவ்வாறாக தஞ்சை மராத்தியர் ஆட்சி துவங்குகிறது.(1) (வெங்கோஜி மராத்தியர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் தம்பி போன்ஷ்லே மராத்தியர்) 1) கி.பி 1698 கிழவன் சேதுபதி - ஷாஜி 1686 ஆம் கிழவன் சேதுபதி மதுரை நாயக்கர் மீது நடத்திய படையெடுப்பில் சேதுபதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஷாஜி படை உதவி செய்தார்.(2) போரில் வென்ற சேதுபதி செய்த ஒப்பந்ததின்படி 12 ஆண்டுகள் தஞ்சைக்கும் பாம்பாற்றுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பகுதியை விட்டுக்கொடுத்தார்.(3) 12 ஆண்டுகள் கழித்து ஒப்பந்ததின்படி மீண்டும் சேதுபதியிடம் பெற்ற பகுதியை தஞ்சை அரச...

வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி திரிகூடபதி சிவனனைந்த தேவர்கள் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு செய்த திருப்பணிகள்

Image
சேதுபதி என்றால் சேதுவின் அதிபதி. தீர்த்தபதி என்றால் தாமிரபரணிக்கு மூலமான புனிதமான பான தீர்த்தத்துக்கு அதிபதி. அதே போல் திருகூடபதி என்றால் திரிகூடம் என்னும் திருக்குற்றாலத்தின் அதிபதி. பாண்டியர் மெய்காவல் படையில் இருந்து பராக்கிரம பாண்டியனின் ஆணைக்கு இணங்க ஒரு கொள்ளக்கூட்டத்தை ஒழித்து அக்கூட்டத்தின் தலைவன் தலையை மன்னன் முன் வைக்க செம்புலிதேவன் என்ற பட்டத்துடன் வடகரை அரசாட்சி பாண்டியனால் (கி.பி 1391ல்) வழங்கப்படுகிறது.(1) குற்றாலநாதர் கோவில் திருப்பணிகள்: ======================================= இவர்கள் இக்கோவிலில் பாண்டியர் காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலம் வரை திருப்பணி செய்து உள்ளனர். 1)முதலாவது அரசர் (செம்புலி சிவனணைஞ்சாத் தேவர் 1391-1434 (2).) குற்றாலிங்கம் குழல்வாய்மொழியம்மன் பொது மண்டபம், குற்றால அன்னசத்திரத்தை கட்டிமுடித்தார் . இவரின் ஸ்தானாபதி (மந்திரி (அ) அமைச்சர். பொதுவாக காராள வேளாளர் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்) வயித்தியப்ப பிள்ளை வயித்திய விசால மண்டபம் கட்டி முடித்தார்.(3) 2) இரண்டாவது அரசர் (வீரபாண்டியன் காலத்தவரான முத்...